
கொழும்பில் இருந்து வெளிவரும்
வீரகேசரி வாரவெளியீட்டில் 22.03.2026இல் பதிவாகி வெளிவந்திருப்பது…..
புகழ்பெற்ற தேன்மதுரக் குரலோன், நாடக நடிகர், தேசவிடுதலைப் பற்றாளர், நகைச்சுவையாளர், இந்தமண் எங்களின் சொந்தமண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் குறிப்பிடத்தக்களவான இசை, நாடகக் கலை பற்றிய பார்வை…..
பேரன்பும்,நன்றியும்
திரு.ச.சிறிகஜன் அவர்கள்,
பிரதம ஆசிரியர்,
வீரகேசரி,
மற்றும் இணை ஆசிரியர்கள்,
நிர்வாகக் குழுமத்தினர்க்கு.
நன்றி
- திரு.செயல்வீரன்,
தாயக இசையமைப்பாளர். - திரு.சா.கோகுலன்,
பாடகர், - திரு.விசு,
ஒலி,ஒளி அமைப்பாளர்,
ஆராதனா கலையகம். - திரு.திருமாறன்(சீலன்),
தாயக அறிவிப்பாளர். - திரு.வி.ப.
- மற்றும் “எரிமலை”
யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி)
சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்…
வாரம் ஒரு படைப்பாளி…
(பார்வை - 88)
ஈழத்து இசைச் சாம்ராட்சியத்தில் எட்டமுடியாத உச்சங்களையும் கற்பனைக்கெட்டாத தூரங்களையும் கடந்து இமயம் தொட்ட மாபெரும் இசை யாம்பவான் ஈழத்தின் புகழ்பெற்ற தேன்மதுரக் குரலோன், நாடக நடிகர், தேசவிடுதலைப் பற்றாளர், நகைச்சுவையாளர், இந்தமண் எங்களின் சொந்தமண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் என்றால் மறைந்தும் மறையாது வாழும் இசைப் பேராறென்றே எண்ணத் தோன்றும் இசைவள்ளலின் குறிப்பிடத்தக்களவான இசைப்பயணம் பற்றிய பார்வையோடு இவ்வாரம் இணைவோம்.
தாயகத்தின் வடபுல தீவுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தில் இறைபதமடைந்த குணரத்தினம் யோகம்மா தம்பதிகளுக்கு 20.12.1960ஆம் ஆண்டு மகனாக சாந்தலிங்கம் பிறந்தார். இளமைத்துடிப்பும் விறுவிறுப்பும் கொண்ட இளைஞனாக கல்விக் காலங்களில் காலடி எடுத்துவைத்த இவர் நண்பர்கள் குழாமோடு எப்போதும் கலகலப்புத் ததும்பிய உணர்வு மிக்கவராய் காணப்பட்டார். இவரது தந்தையார் கொழும்பில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தி வந்தமையால் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் தனது பாடசாலை விடுமுறைக் காலங்களில் கொழும்பு சென்று தந்தைக்கு ஒத்தாசையாக ஈடுபடுவது வழமை. அப்படியான ஒரு காலக்கனிவில்த்தான் இவருக்கான இசை அத்திவாரம் இடப்படக் காத்திருந்தது. 1972இல் கொழும்பு செக்கட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற இவர் நினையாப் பிரகாரமாக “மருத மலை மாமணியே முருகையா…” என்ற பாடலை பாடி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றார். அவருக்கு இருந்த இசைஞானம் அங்குதான் முதல் அரங்காக அமைந்துவிடுகிறது.
இளமைப் பருவத்தில் இசைதுறைக்கு வருவதா…? அல்லது வியாபாரத்தில் ஈடுபடுவதா…? என்ற இழுபறி நிலையில் இருந்த இவர் வீதீயில் செல்லும் போது இவரை அழைத்து “தம்பி அந்த மருதமலைப் பாடலைப் பாடு” என்று பலரும் கேட்டார்கள். இவ்வாறாக அறிமுக உலகத்துள் நுழைந்த இவர் கலையை இறுகப் பற்றத் தொடங்கினார். இவரது தந்தையாரின் மனநிலை தனது மகன் ஒரு தொழில் வாய்ப்பைப் பெறவேண்டும் என்று இருந்தாலும் காலம் அவருக்கான இசைப் பாதைகளை அகலத் திறக்கிறது. அதன் முன்னோடியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த “முகத்தார்” என்ற பெயரில் புகழ்பெற்ற திரு.ஜேசுரட்ணம் அவர்களின் திறமைகாண் தேடல் இல்லாமலே திறமையுள்ள பாடகனாய்த் தென்பட்டார் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரது குரல் வானலையில் தவழத் தொடங்கியது. 1977ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பபட்ட இனப் பதட்டம் காரணமாக கிளிநொச்சிக்கு இடம்பெயரலானார். அங்கு இராமநாதன் அவர்களின் ஆர்மோனிய இசையும், மணியம் அவர்களின் தவில் இசையும் கலந்து கிராமங்கள் தோறும் ஆலயங்கள் நாடி இசைக் கச்சேரிகள் ஆரம்பமாகிறது. இவர்களுக்கான ஒத்தாசையிலும் ஒலி அமைப்பிலும் ஒலிப்பதிவிலும் கரம் கோர்த்து நின்றவர் வன்னியில் பிரபலமான ஒலிப்பதிவாளர் ஆராதனா விசு அவர்கள். “சாந்தன் இசைக்குழுவின்” கச்சேரிப் பயணங்கள் தொடர்ந்தன. பாடகி சகுந்தலா அவர்களும் இவர்களது இசைப் பயணத்தில் இணைத்திருந்தார். கிளிநொச்சியின் பல இடங்களிலும் கச்சேரிகள் நடந்தேறின. பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கி பாடகரது தளம் நகர்ந்து செல்ல பலமான இசை நிலைபெறுகிறது. சாந்தன் அவர்கள் தனது சொந்த இசைக் குழுவோடும் புகழ்பூத்த இசையமைப்பாளர் கண்ணன் அவர்களது இசைக்குழுவிலும் இணைந்து பாடினார்.
கால ஓட்டமும் இசைப் பயண உயர்வும் மெல்ல மெல்ல உச்சத்தை நாடியது. ஊரெங்கும் இசைக்கச்சேரிகளில் தன் இனிமையான குரல் வளத்தால் இரசிக நெஞ்சங்களை தன்வசம் கட்டிப்போட்ட பாடல் நாயகன் குரலிசை வேந்தன் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் தன் இசைப் பயண தொடர் வளர்ச்சி நிலையை எட்டுகிறார். இதன் பேரங்கமாய் உயரிய தாகம் சுமந்த விடுதலை வேள்வியில் பாடலால் ஓர் அங்கமாகிறார். ஈழதேசத்தின் ஈகங்களை, உணர்வுகளை தாங்கிய எழுச்சிப் பயணம் ஒன்றில் உணர்வள்ளித்தெளிக்கும் கலைப்பயணத்தில் பணி தொடர்ந்தார். பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும், தத்துவப் பாடல்களையும் தன் குரல் இனிமையினாலும் இசைரசிக உள்ளங்களை கவர்ந்தீர்த்த இவர் ஒரு புரட்சிக் காலத்தில் தடம் பதிக்கிறார்.
ஈழத்தின் ஆஸ்த்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் “இந்தமண் எங்களின் சொந்தமண்” என்ற பாடல் வரியில் ஈழத்து உள்ளங்களை நெஞ்சார இணைத்து தேசத்தின் சேதி சொன்ன தத்துவார்த்த குரலிசைக்கு, உணர்வு கலந்த இசைப் பெருவெளிக்கு உலகத் தமிழினமே புருவமுயர்த்தி நின்றது. ஈழத்தின் விடுதலைத் தாகம் சுமந்த பல்வேறு பாடலாசிரியர்கள் தம் ஆத்மார்த்த வரிகளை எழுதி நிற்க ஈழத்தின் இசையாம்பவான்கள் இசை கோர்க்க உணர்வு கலந்த சிம்மக்குரலோன் எஸ்.ஜி.சாந்தன் உட்பட்ட பல முன்னணிப் பாடக, பாடகிகள் தேசக்கானம் இசைத்து நின்றனர். ஈழதேசமும் அதன் தாக உணர்வும் தரணியெங்கும் காட்டாற்று வெள்ளமாய் மடை திறந்தது. ஈழத்துக் குயில்களின் பாடல்களுக்கு கானகத்து மரங்கள், மயில்கள்கூட நர்த்தனமாடி நின்றன. இயற்கையைப் பாடினர், இயற்கை இனத்திற்குத் தந்த பெரு வள்ளலைப் பாடினர், இனம் வாழ உயிர் தந்தோரைப் பாடினர், காலம் சூழ் இன்னலைப் பாடினர், கனதி மிக்க தருணங்களைப் பாடினர், கண்ணீர் தோய்ந்த வாழ்வினைப் பாடினர், கையோடு காத்திரமாய் இருந்த அத்தனையையும் பாடினர் இத்தனை பாடல்களைக்குள்ளும் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் காந்தக் குரலில் பதிவான இசைப் பேழைகள் எத்தனை எத்தனை. இசைப் பேழைகளில் மட்டுமன்றி கானலைக் காட்சிகளிலும் பாடல்களூடே பதிவாகி நின்றார் பிரபல தேசியப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் .
இயல்பில் முருகபக்தனான இவர் தேசபக்தனாய் தேசத்தை தன் நாவினிக்கப் பாடி நின்றார். புராண, இதிகாச நாடகங்களிலும் முத்திரை பதித்த இவர் அரிச்சந்திரா மயாணகாண்டத்தில் அரிச்சந்திரனாய் தன் குரல் கம்பீரத்தால் அரங்கையே அதிரவைத்து இரசிகர் மனங்களை மிரளவைத்தார். அணியிசைக் கலைஞர்களே வியந்து பார்த்த மாபெரும் கலைஞர். அரிச்சந்திரா மயாணகாண்டம், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களிலும் “எதிர்காலம் இருளல்ல” என்ற முழுநீளத் திரைப்படத்திலும் நடிப்பாற்றலின் உச்சத்தைத் தொட்டு நின்றார். காலங்கள் விரிந்தன கலைப் பயணத்தின் அரங்கங்கள் பரந்து நின்றன. பாடகர்களாய் இருந்த அவரது பிள்ளைகள் இருவர் தாய் மண்ணுக்காய் வித்தாகினர். 1998ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டின்ன்ட் கானகன் (மோகன்ராஜ்), 2009ஆம் ஆண்டு மேஜர் இசையரசன் (பிரபுராஜ்) ஆகியோர் விழிமூடி மீளாத்துயில் கொண்டனர்.
ஒரு தந்தையாய், ஈழத்தின் பிரபல தேசிய எழுச்சிப் பாடகராய் தடம் பதித்துப் பயணித்த எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒலிக்க விடப்படும் மாவீரர் பாடலில் “மடியில் தவழ்ந்த மகனே” என்ற வரியை உச்சரிக்கும் போது உணர்வில் கலந்து தான் கரைந்து போய்விடுவதாக அன்றைய நாளில் பதிவு செய்து நின்றார் எஸ்.ஜி. சாந்தன் அவர்கள்.
பல்வேறு கலைத்துறைப் பயணங்களில் ஈழ தேசத்தின் தலைவரிடம் பாராட்டுகளைப் பெற்ற இவர் பல களநிலை தளபதிகள், துறைசார் பொறுப்பாளர்கள், கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்துறைக் கலைஞர்களோடும் தாயகத்தின் பிரபல இசையமைப்பாளர்களோடும் வளர்ந்து வரும் இசைத்துறை சார்ந்தவர்களோடும் முதுபெரும் பேராளர்கள், நிதர்சனம், புலிகளின்குரல், கலைபண்பாட்டுக்கழகம், இயங்கு நிலை கலைத்துறை சார்ந்தவர்களோடும், முன்னிலை எழுத்தாளர்களோடும், வித்தான வீரர்களோடும், அவர்தம் நினைவுகளை தாங்கியும் வாழ்ந்தவர் என்பதோடு பலராலும் நேசிக்கப்பட்ட குரலின் சொந்தக்காரருமாவார்.
தாயகத்தின் பட்டி தொட்டி எங்கும் எங்காவது ஒரு மூலையில் எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருந்த குரல் எஸ்.ஜி.சாந்தனுடையதாகவும் இருந்தது. உலகத் தமினம் ஆழ்மனதில் எப்போதும் நேசிக்கும் உணர்வு கலந்த தேசக்குரலோன் மறைந்தும் காற்றலையில் குரலூடே உயிர் வாழும் மகத்தான பேறு பெற்றவர்.
கலைஞன் சாகலாம் கலை ஒருபோதும் சாகாது.…. அதற்கமைவாக நாடகக் கலைஞனாய் அழிக்கமுடியாத நினைவுகளோடு வாழும் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் தரவரிசையில் எப்பாடல் வரியாயினும் அதற்கு குரல் வழியே உயிர் கொடுத்து உலாவரச் செய்த எஸ்.ஜி.சாந்தனையும் உலகத் தமிழினம் அந்தத் தரவரிசையிலையே மகுடம்சூடி வைத்திருக்கிறது.
பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் பாடிய பலநூற்றுக் கணக்கான தேசிய எழுச்சிப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் இயன்றவு பதிவேற்ற முனைகிறோம்.
தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
- வானம் பூமியானது – இவருடைய முதலாவது பாடல்… 1989 இல் வெளிவந்தது
- அடங்கிக் கிடந்த தமிழன் (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்
- அடி அடி அடியென (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03)
- ஆதியாய் அநாதியாய் (இறுவெட்டு: பரணி பாடுவோம்)
- அலையை அலையைப் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02)
- அலைகள் குமுறி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 03)
- ஆழக் கடலெங்கும் (இறுவெட்டு: நெய்தல்)
- ஆனையிறவின் மேனி தடவி (இறுவெட்டு: அலையின் வரிகள்)
- இங்கு வந்து பிறந்தபின்பே (இறுவெட்டு: கரும்புலிகள்)
- இந்த மண் எங்களின் – இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவெட்டாகும்… 1990 இல் வெளிவந்தது (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்)
- இரவு பூத்து (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
- இனிவரும் இனிவரும் (இறுவெட்டு: ஆனையிறவு)
- ஈழத்திருமகள் (இறுவெட்டு: தாயகத்தாய்)
- ஊர் பெயரைச் சொல்லவா (இறுவெட்டு: தமிழீழ மொட்டுக்கள்)
- எங்களின் வாசலில் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்)
- எத்தனை பேர்களை (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- எந்தையர் ஆண்ட (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- எம்மண்ணில் எதிரிகள் (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- ஒரு கூட்டுக் கிளியாக (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 02)
- உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
- கடலதை நாங்கள் (இறுவெட்டு: நெய்தல்)
- கடலலை எழுந்து (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 10)
- கடலின் மடியில் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07)
- கடலோரப் பூவாக (“உப்பில் உறைந்த உதிரங்கள்” திரைப்படத்திலிருந்து)
- கண்ணுக்குள்ளே வைத்து – இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும்
- கரும்புலிகள் என நாங்கள் (இறுவெட்டு: பரணி பாடுவோம்)
- கரும்புலி எழுதிடும் கடிதம் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04)
- களங்காண விரைகின்ற
- கல்லறை மேனியர்
- கல்லறைகள் விடை திறக்கும் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்)
- காற்றடிக்கும் திசைகள் (இறுவெட்டு: அலைபாடும் பரணி)
- கிழக்கு வானம் (இறுவெட்டு: பூநகரி நாயகன்)
- குயிலே பாடு (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- கோபுர தீபம் நீங்கள்
- கோணமலை எங்களது (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்)
- சண்டைகளின் நாயகனே (இறுவெட்டு: சமர்க்கள நாயகன்)
- சிங்களம் எங்களை கொன்று (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- சிட்டு சிட்டு சிட்டு ஈழமண்ணில் பூத்த மொட்டு (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்)
- சீலன் புயலின் பாலன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
- சுற்றி வரக் கடலே (இறுவெட்டு: பசுந்தேசம்)
- தமிழீழத்தின் எல்லையை
- தாயவளே உன்னை (இறுவெட்டு: தாயகத்தாய்)
- தூக்கம் ஏனடா (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- நித்திய புன்னகை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
- நித்திய வாழ்வினில் (இறுவெட்டு: தேசத்தின் குரல்)
- நிலவே கண்ணுறங்க (இறுவெட்டு: வாகையின் வேர்கள்)
- நிலாக்கால நேரமிங்கே (இறுவெட்டு: ஊர் ஓசை)
- நீலக்கடலே பாடுமலையே (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
- நெஞ்சிலே இருந்த கோபம் (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
- பண்பாட்டுக்கு இசைவாக (இறுவெட்டு: பரணி பாடுவோம்)
- பாட்டுக்குள் கரும்புலி (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01)
- பாயும் புலி அணி (இறுவெட்டு: விடியும் திசையில்)
- பிரபாகரன் எங்கள் தலைமை
- புதிய சரிதம் எழுதிட
- பெய்யுதே மழை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
- பெருகும் கால நதியில் (இறுவெட்டு: போரிடும் வல்லமை சேர்ப்போம்)
- மாரி கால மேகம் தூவி (இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம்)
- மீண்டும் எனக்கொரு (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09)
- விண்வரும் மேகங்கள் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்
- மின்னல் சூழும் (லெப். கேணல் மதனாவின் நினைவாகப் பாடப்பட்ட இப்பாடலானது, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 67வது இதழில் இடம்பெற்றுள்ளது.)
- தாந்தாமலைத் தென்றல் உன்னைத் தாலாட்டுமே
- சாவுக்குள் வாழ்வெனும் தத்துவம்
தாங்கிய தர்மத்தின் காவலர்கள் - வாசலிலே கோலமிட்டு வாழைத்தோரணம் கட்டு
- நந்தசேன மல்லி நீ வந்ததேனோ துள்ளி (இறுவெட்டு: புயலாகும் புதுராகங்கள்)
பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள் - அன்னை தேசமே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம்)
- அழுது அழுது உடன் பின்னணிப் பாடகர்களான மணிமொழி & பாடகி (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
- இருளின் திசைகள் புலரும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி, மணிமொழி & தவமலர் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்)
- ஊருக்குப் போவோம் உடன் பின்னணிப் பாடகரான (இறுவெட்டு: அலையின் வரிகள்)
- அஞ்சு வயதிலே அற்புதங்கள் உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி மற்றும் தவமலர் (1998ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
- எதிரிகளின் பாசறையை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்)
- கடலின் அலையில் உடன் பின்னணிப் பாடகரான (இறுவெட்டு: புதிய காற்று)
- கரிகாலன் வாழ்ந்திடும் உடன் பின்னணிப் பாடகரான (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
- தாண்டிக்குளம் தாண்டி உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான (இறுவெட்டு: விழித்திருப்போம்)
- பகை வாழ்ந்த குகை உடன் திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான (இறுவெட்டு: முல்லைப் போர்)
- படைகொண்டு வந்த உடன் பின்னணிப் பாடகரான (இறுவெட்டு: தீக்குளித்த நேரம்)
- வா பகையே உடன் பின்னணிப் பாடகரான (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13)
- வா வா என்றே உடன் வசீகரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (“கடலோரக்காற்று” திரைப்படத்திலிருந்து)
- வானத்தில் ஓடிய மேகம் அழுதது உடன் ஜெயா சுகுமார் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01)
- வீரக் கடற்புலி உடன் பின்னணிப் பாடகரான மணிமொழி, பிறின்சி, மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
- நீலக்கடலே அலை மோதும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
- புலிகளின் தாகம் மற்றும் பின்னணிப் பாடகர்களான ??
- பூங்கொடியாய் இருந்தாய் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: சூரியப் புதல்விகள்)
- வலையை ஏத்தடா அந்தோணி உடன் திருமாறன் (சீலன்) (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13)
- விடியும் திசையில் பயணம் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர்
- விடியும் திசையில் ஒளிபரவிட உடன் நிரோஜன், திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகரான மணிமொழி (“புயல் புகுந்த பூக்கள்” திரைப்படத்திலிருந்து)
- வில்லுப்பாட்டு உடன் சீலன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி)
- இன்னும் நாங்கள் இருட்டில் இருந்தால் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
- உடுக்கை அடிச்சு உடுக்கை அடிச்சு உருவை ஏத்தடா உடன் இசையரசன், சந்திரமோகன் மற்றும் பின்னணியில் கானகி மற்றும் பாடகி (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- இன்னுமின்னும் கரும்புலி வெடிக்கும் உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03)
- எம் வேரினை அவனே உடன் மேரி (இறுவெட்டு: வரலாறு தந்த வல்லமை)
- உலகத் தமிழர் உடன் ஜெயா சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: ஊர் போகும் மேகங்கள்)
- கதியால் அரக்கும் உடன் வசீகரன், சந்திரமோகன் மற்றும் பின்னணியில் கானகி மற்றும் சீலன் (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- கருவேங்கை புயலெனப் புகுந்தது உடன் மேரி (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04)
- காலம் உன்னை களம் நோக்கி உடன் புவனா இரத்தினசிங்கம் மற்றும் பின்னணியில் கோகுலன் மற்றும் ???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- காலம் எழுதிய புதிய வரி உடன் மணிமொழி மற்றும் பார்வதி சிவபாதம் (“அக்கினிப்பறவைகள்” விவரணச் சித்திரத்திலிருந்து)
- சுக்குநூறானது சிக்குறு உடன் ஜெயா சுகுமார்
- கைகளில் விழுந்தது கிளிநொச்சி உடன் ஜெயா சுகுமார்
- தூரம் அதிகமில்லை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- புதிய காற்று ஈழ மண்ணில் எழுந்தது உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி (கரும்புலி மேஜர் நிலவன் எழுதிய இப்பாடலானது 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழில் இடம்பெற்றது)
- மனமே மனமே உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
- மெல்ல வந்து மேனிதொடும் இந்த மண்ணின் குரல் காதில் விழும் உடன் சீலன் (திருமாறன்) மற்றும் பின்னணியில் பிறின்சி
- விடுதலை மகுடம் சூடிய உடன் நிரோஜன் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
- விண்ணையாளும் சூரியனை உடன் கப்டன் இசையரசன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
- வீரப்படை வெகு வீரப்படை உடன் ?? (இறுவெட்டு: விடுதலை நெருப்புக்கள்)
- ஆனையிறவுக்கு சேலைகள் உடன் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: ஆனையிறவு)
- இடியா மழையா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
- ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: ஆனையிறவு)
- ஈழமண் எரிகின்ற போதிலே உடன் ஜெயா. சுகுமார், மணிமொழி, தவமலர், நிரோஜன் & திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
- உறவுகள் வேரில் உடன் ஜெயா சுகுமார், பிறின்சி & மணிமொழி (2002ம் ஆண்டில் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
- எதிரி வாய்கள் மௌனம் உடன் ஜெயா. சுகுமார்
- எம்மை நினைத்து யாரும் உடன் பார்வதி சிவபாதம் (இறுவெட்டு: கரும்புலிகள்)
- எரியும் நெருப்பில் உடன் தனுராஜ் (இறுவெட்டு: ஊர்க்குயில்)
- ஏறுது பார் கொடி உடன் சியாமளா (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- ஒரு லட்சம் சூரியன் உடன் வசீகரன், பிறின்சி, மற்றும் மணிமொழி (இறுவெட்டு: விழி நிமிர்த்திய வீரம்)
- கண்ணீர் மழை மண்ணில் உடன் ஜெயா. சுகுமார், வசீகரன், பார்வதி சிவபாதம் & புவனா இரத்தினசிங்கம் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) – தலைவரின் பிறந்த நாளுக்காகப் பாடப்பட்ட இப்பாடலானது ஜனவரி-பெப்ரவரி 2004 அன்று வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 104வது இதழிலும் இடம்பெற்றுள்ளது
- கரிகாலன் படையிது உடன் மேஜர் சிட்டு
- கருவேங்கை ஆகிய காற்று உடன் திருமலைச் சந்திரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி)
- கல்லறையில் விளக்கேற்றி உடன் புவனா
- காலை விடிகின்றதடா உடன் ஜெயா சுகுமார் மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
- காற்றில் கலந்த கடற்கரும்புலிகள் உடன் ஜெயா. சுகுமார், கௌசி மற்றும் பிறின்சி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02)
- குத்தாட்டம் போடடா உடன் சந்திரமோகன் மற்றும் கப்டன் இசையரசன்
- சங்கு முழங்கடா தமிழா உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: பூநகரி நாயகன்)
- சின்னஞ்சிறு ஊரு உடன் மணிமொழி (இறுவெட்டு: ஆனையிறவு)
- ‘சூரிய தேவனின்’ வேருகளே உடன் மணிமொழி மற்றும் தியாகராஜா (தனிப்பாடல்)
- தந்தனா பாடலாம் உடன் நிரோஜன் (இறுவெட்டு: அலைபாடும் பரணி)
- தமிழர் என்ற சொல்லிலே உடன் வசீகரன் (இறுவெட்டு: முடிசூடும் தலைவாசல்)
- தமிழர் தேசம் உடன் வசீகரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: விழித்திருப்போம்)
- தலைநகர் மீட்க உடன் நிரோஜன் (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்)
- தாயக மண்ணின் காவலராகி உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
- தோளின் சுமைகளில் உடன் ஜெயா சுகுமார் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்)
- நிலவற்ற வானத்தில் உடன் ஜெயா. சுகுமார், மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
- நெருப்பாகி நெருப்பாகி உடன் வசீகரன் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்)
- நெருப்பில் விளைந்த உடன் பார்வதி சிவபாதம்
- பாரில் தமிழன் படும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
- புதிய உதயம் ஒன்றெதிரில் உடன் ஜெயா. சுகுமார், நிரோஜன் மற்றும் திருமலைச் சந்திரன்
- புதிய வருடமே உடன் திருமலைச் சந்திரன், சந்திரமோகன், சீலன், மணிமொழி & பிறின்சி
- பூ மலர்ந்தது கொடியினில் உடன் சியாமளா – 1990 (இறுவெட்டு: இந்த மண் எங்களின் எங்களின் சொந்த மண்)
- மல்லிகைப் பூக்களை உடன் சுகுமார் (“இன்னும் ஒரு நாடு” திரைப்படத்திலிருந்து)
- முல்லை மண் எங்களின் உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: முல்லைப் போர்)
- வட்டமதிமுகப் பெண்ணே உடன் பிறின்சி (இறுவெட்டு: வெல்லும் வரை செல்வோம்)
- வருக எங்கள் மக்களே உடன் மேஜர் சிட்டு (“காற்றுவெளி” திரைப்படத்திலிருந்து)
- வாசலில் வீசிடும் பூங்காற்று உடன் தியாகராஜா & மணிமொழி (1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
- விடியும் விரைவில் உடன் தியாகராஜா
- வெள்ளிநிலா விளக்கேற்றும் உடன் மேஜர் சிட்டு மற்றும் பின்னணியில் மேளின் வேஜினி (இறுவெட்டு: நெய்தல்)
பக்திப் பாடல்கள்
தொகுப்பு…..
- பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் (கொக்கட்டிச்சோலை)
- துதிக்கை தூக்கி ஆளையா (கரணவாய் பிள்ளையார்)
- வேழமுகனே ஆளையா (கரணவாய் பிள்ளையார்)
- அழகுரதம் ஏறி எங்கள் ஆனைமுகன் வாறான் (சந்திரசேகரப் பிள்ளையார்)
- சந்திரசேகரப் பிள்ளையாரை (சந்திரசேகரப் பிள்ளையார்)
- வதிரன்புலோ வாசன் வண்ணமயில் அழகேசன் (மூளாய் பிள்ளையார்)
- முருகண்டி வீதிக்கரை அமர்ந்த கணபதியை நீ நாடு (முருகண்டிப் பிள்ளையார்)
- துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே (முருகண்டிப் பிள்ளையார்)
- கணபதியின் திருப்பாதம் கண்களுக்கு மனப்பாடம் (முருகண்டிப் பிள்ளையார்)
- சித்திரத் தேரேறும் சித்தி விநாயகா (நெடுந்தீவுப் பிள்ளையார்)
- மாம்பழக்கதையின் நாயகனே (வந்தாறுமூலை)
- நாயகனே கல்வளைப் பதிவாழும் (கல்வளைப் பிள்ளையார்)
- தேரோடுது தேரோடுது தேரோடுது பாரு (கல்வளைப் பிள்ளையார்)
- கஜகேணிப் பிள்ளையாரே காப்பு (உசன் கந்தசாமி)
- மூளாயூரின் வதிரன்புலோவில் மூத்தவிநாயகர் திருக்கோலம் (மூளாய் பிள்ளையார்)
- திசையெல்லாம் ஒளிவெள்ளமே (கைதடிப் பிள்ளையார்)
- கைதடி கணபதியை (கைதடிப் பிள்ளையார்)
- வந்தாறுமூலை எங்கள் வளமிகு பழம்பதியூர் (வந்தாறுமூலை)
- அம்மையப்பன் பெற்றெடுத்த மூத்தபிள்ளை (அளவெட்டி)
- செருத்தனை வாழும் மகாமாரி (புளியங்கூடல் மகாமாரி
- மங்கள நாயகியே (புளியங்கூடல் மகாமாரி)
- கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா (வற்றாப்பளை கண்ணகி)
- வானுயர்ந்த கோபுரத்தைப் பாருங்கள் (திருமலை நாயகி)
- நோன்பினில் சிறந்தது கௌரி நோன்பதுதான்
- நங்கையவள் பெருமை நாலிடமும் பரவ
- ஆழ்கடல் உனைத் தழுவிட ஆதரித்திடும் நாயகி (நயினை நாகபூசணி)
- கலைபொங்கும் தீவினிலே உறைகின்ற தேவி (நயினை நாகபூசணி)
- உன்னைவிட உயர்ந்த சக்தி உலகத்தில் இல்லையம்மா (தம்பாட்டி அம்மன்)
- மாங்கனி வேண்டுமென்று மயிலேறி வந்தவனே (பண்டத்தரிப்பு முருகன்)
- சித்தம் தெளிந்தேனே ஐயா (சாளம்பை முருகன்)
- பழம்பெரும் திருவூராம் (பண்டத்தரிப்பு முருகன்)
- மணி ஒலிக்குது (தம்பாட்டி அம்மன்)
- உருக உருகப் பாடுகிறோம் உசன் முருகா (உசன் கந்தசாமி)
- ஐயப்பன் புகழ்பாடுவோம்
- சிவனுக்கு மூத்தபிள்ளை (கைதடிப் பிள்ளையார்
- பரவசம் தருகிறதே உந்தன் பாதச்சிலம்பின் ஒலி (வந்தாறுமூலை)
- கண்ணா கண்ணா கண்ணா கண்ணா (வந்தாறுமூலை)
- உடுவில் பதியமர்ந்த மீனாட்சியம்மா
- வாரி வாரி அருள்மாரி பொழிபவளே முத்துமாரி
- ஆடுமயில் மீது வந்து ஆளுகின்ற முருகையா
- மாமணி ஓசை கேட்கின்றது
- நீர்வேலி முருகேசரே
- புள்ளிமயில் மீதினிலே ஏறி
- சித்திரை மாதமும் கொடியேறும்
- சீர்மேவிச் செம்பொருளாகி
- மயிலிட்டி மண்ணை வலம் வந்தோமே
- சரணம் சரணம் கணபதி சரணம்
- வெள்ளைக் கடற்கரை தள்ளும் அலை நுரை வெள்ளிப் பூப்போலப் பூக்கும்
- ஊசியிலே தொங்கிக் கொண்டு நோவையெல்லாம் தாங்கிக் கொண்டு
- தொம் தொம் தொம் கணபதியே
- மூசிகவாகனப் பிள்ளையார் இந்த மூவுலகாளும் பிள்ளையார்
- ஐந்துதலை நாகம் குடைபிடிக்க
- பிள்ளையார் சுழிபோட்டு அறுகம்புல் மாலைசாற்றி
- வளம் நிறை ஊர் இதுவே வடலியூர் இதுவே
- வானம் மலர்தூவ வான்தேவர் வாழ்த்த
- சித்தி விநாயகா சரணம் சரணம்
- மோதகப் பிரியனே பிள்ளையாரே
- பிள்ளையாரை நினைத்துக் கும்பிட்டு வேண்டிவிடு
- தாயின் பெருமை பாடிடுவோம்
- பசுமைசூழ் பணிப்புலம்
- சுட்டிபுரத் தாயே சினம் கொண்ட தீயே
- அறத்தி அறத்தி அறத்தி
- துளசி மாலை தோளில் ஆடக் குழலை ஊதும் கண்ணா
- முக்கண்ணனே எங்கள் மூலமுதல்வனே
- ஆயிரம் சூரியன் உன் முகத்தில் தெரியும்
- இருகரம் கூப்பி வணங்கிவிடு
- அரவத்தால் பாற்கடல் கடைந்த சடையான்
- கோணங்குள கணபதியை
- அலங்காரக் கந்தனாய் அம்பதியிலே அமர்ந்தவா
- யானை முகத்தான் மூத்த கணநாயகன்
- நித்தமும் மனம் உந்தன் தலம் நாடுதே
- முனியப்பன் காலடி கண்டுதொழ
- புலம்பெயர்ந்து வேறு மண்ணில் நாமிருந்தாலும்
- வடமுனையில் வீற்றிருக்கும் பெரிய பிள்ளையார்
- ஆலடியில் வீற்றிருக்கும் ஐங்கரனே நமோ
- தேரேறி வரும் கோலம் கோலாகலம்
- எங்கள் கணபதிக்கு அன்பு வணக்கம்
- நாதம் கேட்குதடா ஓமென்றே
- நாயகமாய் அமர்ந்து நாயுடன் காத்து நின்று
- அம்பிகையே எமையாளும் ஜெகதாம்பிகையே
- கும்பிட்டோர் துயர்தீர்க்கும் கூழாவடிப் பிள்ளையாரே
- வரமொன்று அருளிட வாராயோ அம்மா
- பெற்றோரே உலகென்று மாங்கனி பெற்ற பிள்ளை
- கற்சிலைமடு உறையும் கணபதியே
- ஐந்துகரம் இருந்தும் தாராதிருப்பாயோ
- கல்வெட்டுத்திடல் கந்தன் என்ற பெயர் பெற்றவன்
- மகிழமரத்தான் எங்கள் ஆறுமுகத்தான்
- சுந்தர உருவம்
- தாயே ஈஸ்வரியே உந்தன் திருநாமம் பாடிவந்தேன்
- திருவிழா திருவிழா உலவிக்குள நாயகனின்
- நாயகனே வெல்லன் விநாயகனே
- கரவைப் பதியில் கருணை பொழிய வந்தமர்ந்தான் கணபதி
- உலகாளும் உத்தமியே காவல்தெய்வமே
- அறுகம்புல் நாயகனே வேண்டும் வரம் தாருமையா
- கொய்யாவளைக் கந்தனுக்கு காவடி
- எனையாளும் என் அன்னை மகாமாரி
- எத்தனை நாமங்கள் சூடிவந்த தாயே
- கடல்கொண்ட மதுரையிலே சினம் கொண்டு நின்றாய்
- நற்றமிழ் அணியிசைந்து சங்கமிக்க
- கொடிகாமம் பதியுறை கொற்றவையே தாயே
- சண்டிலிப்பாய் கூறும் பொருளே ஊர் போற்றும் நாயகனே
102.ஈடிணையில்லா இரட்டயப்புலத்தவனே - வண்ணைக் காமாட்சி
104.முருகா உன் பெயர் சொல்ல இனிக்கின்றது - அம்மா அபிராமியே ஆளும் சிவகாமியே
106.அரசோலை விநாயகனே - ஓங்கார மணி ஒலிக்கும்
- தாமரைப் பத மலர்
- குருபரனை
- மயில்மீது வந்தான்
- சிந்தனை செய்திடுவாய்
- உள்ளம் உருகி
- மஞ்சப்பதி முருகன்
- பரிந்தோடி வந்தான்
- மஞ்சப்பதி கந்தன்
- துதித்திடுவாய் நெஞ்சே
- அருள் தந்தே என்னை
- கானமயில் மீது
- ஆறுமுகன் இருக்க
- இணுவையூர் மஞ்சப்பதி
- மயில் வாகனனை
- ஐந்துகர ஆனைமுகப் பிள்ளையார்
- கன்னிமூலக் கணபதி
- சுந்தரமாயொரு
- கண்ணகையம்மா எங்கள் கண்ணகையம்மா
- கடல்வழி வந்த நம் கண்ணகையே
- முழங்காவில் பதிவாழும் சித்திவிநாயகனே
- முத்துக்காவடிகள் காண வாருங்கோ
- சுதுமலையில் குடிகொண்ட எச்சாட்டி நாதா
- தென்சுதுவைப் பதியினிலே
- எட்டுத் திசையிலும் உன் புகழ் பரவ
- வதிரி எனும் பதியினிலே
- சிதம்பரவளவாளே அருள்சொரிய வருவாய்
- ஆயிரம் கண்கொண்ட தேவியம்மா
- ஆடிப்பூரத் திருவிழா பாடிப்போற்றும் பெருவிழா
- தாவடிப் பிள்ளையார் தாவடிப் பிள்ளையார்
- வேதவிநாயகா வேதவிநாயகா
- பழவத்தை பதியாளும் காளியம்மா
- சந்தனத்தின் வாசத்திலே தந்தனத்தோம் தாளத்திலே
- வேப்பிலைக்காரி அம்மா வீரமாகாளி
- சஞ்சலங்கள் தீர்க்கும் எங்கள் சங்கரனின் மைந்தா
- மாமணியானே எங்கள் மாமணியானே
- பாடவந்தோமே சபரிமலை வாசனையே பாடவந்தோமே
- பைந்தமிழ்
- தேன்மொழிச் சுவை நீதானே பெரும் வானருள் மழை நீதானே
- வாசலிலே வந்து நிற்கும் வண்ணத்தமிழ் முருகா
- சாணமோர் பிடியெடுத்து அறுகம்புல்லை நுள்ளியெடுத்து
- கல்லிருப்பு கல்லிலொரு கற்பூரச் சிரிப்பு
- அன்பினைச் சொரியும்
- உறுமிடும்
- அண்டம்
- மரியாத்தா
- ஊரெண்டா ஊரு
- கவலையின்றி பாடுகின்றோம்
- வேப்பமரம் குடைபிடிக்க
- மதுராபுரியின்
- பச்சை நிலம் படர்ந்த
- பொலிகண்டி கரையினில் எழில்கொஞ்சும் பதியினில் அமர்ந்தவனே
- குட்டி நல்லூர் என்று கும்பிடுங்கள்
160.நெஞ்சத்தில் குமரனைத் தேடிடுவோம் - நிழல் சூழ்ந்த வேம்பிடையில்
- “ஒதியமலையானே” இறுவெட்டில் உள்ள பாடல்/பாடல்கள்
- ஞானவைரவர் பாதம் பணிந்திட நாளும் அருள்கூடும்
- அம்மா உன் கோவிலிலே மணியோசை கேட்கையிலே
- கல்வளை எனும் பதி உண்டு
- அம்பிகை பாலகனாய் அருகிருப்பவனே
167.திருவடிவே எங்கள் சிவவடிவே - தஞ்சம் என்று நாடி வந்தோம்
- ஆனைமுகத்தானே ஐயா ஐங்கரனே நாதா
- இணுங்கித்தோட்டம் உருவான
- பிள்ளையார் எனும் நாமம்… (நித்தம் துதி மனமே…)
- வட்டுவாகல் கன்னிகள் தாய் புதுமை தனையே
- மயிலையூரில் வாழும் எங்கள் வேல்முருகையா
- அழகான ஊரிருக்கும் ஆனைமுகத்தான் (தாமரைக் குளத்தருகில் ஜில் என்று காற்று வரும்…)
- வாரிக்குட்டி ஊர் அமர்ந்து வயல்தனையே செழிக்கவைக்கும் வீரனையா
- மக்கள் குறைதீர்க்க வந்த மாரித்தாயே
- அதிசய தெய்வம் நம்ம அதிசய தெய்வம்
- சிங்காரக் காவடியில் சிந்தை மகிழும் வேலனுக்கு
- ஆழ்கடலின் மதியினிலே
- காட்டுப்பிள்ளையார்…
- குரும்பசிட்டி மாரி அம்மன் மீது பாடப்பட்ட 2 பாடல்கள் (“ஊருக்குப் போறோம் ஊருக்குப் போறோம் உறவுகள் கூடி” பாடல் உட்பட)
- “நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே” இறுவெட்டில் உள்ள பாடல்கள்
- விநாயகர் துதி
- ஆதாரமுனது
- பாயும் புலி
- மாரியுபகாரி
இவ்வாறாக ஈழத்து இசை, நாடக வரலாற்றில் தனக்கென ஒரு பக்கத்தை நிலைநாட்டிப் பயணித்த தேசத்தின் புகழ் பெற்ற எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் தாயகம் கடந்து தமிழ்மக்கள் வாழும் வெளிநாட்டு அரங்குகளிலும் தன் கலைப் பயணத்தை மேற்கொண்டு அங்கும் தன் பாடல் திறனை முரசறைந்து நின்றார். தாயக தேசத்தில் 2009ஆம் ஆண்டு போர் மேகங்கள் சூழ்ந்த போதும் மாறி மாறி இடம்பெயர்ந்த இவர்
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். போர் மௌனிப்பின் பின்னர் நிரப்பமுடியாத பல வெற்றிடங்களை நெஞ்சறையில் சுமந்த இவர் கிடைக்கின்ற இசை நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மகிழ்வித்து நின்றார். இவ்வாறாக பயணித்து வரும் இவரது உடல் சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவம் பெற்ற நிலையிலும் இசை மேடைகளை, தன் இசை இரசிக உள்ளங்களை மகிழ்வித்து நின்றார். “சுகவீனமுற்றிருந்தாலும் என்னுடைய பாடலை விடவில்லை
மேடையில் இறந்தாலும் பறவாயில்லை பாடல்தான் என்னுடைய உயிர் மூச்சு
அதனால் நான் பாடிக்கொண்டேயிருப்பேன்..
ஏலும் என் உடலில் ஒரு சக்தி இருக்கும் வரைக்கும் நான் பாடிக்கொண்டே இருப்பேன்…”
என உரைத்தவாறு கடும் நோயுற்ற போதும் அரங்குகளில் இசைவார்த்த ஈழத்துப் பெருங்குயில் 26.02.2017 அன்று நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டு விடை பெற்றது.
மறைந்தும் மறையாத தந்தையின் நினைவு சுமந்து இசைவாரிசு கோகுலன் சகோதரர்களோடு இணைந்து “சாந்தன் இசைக்குழுவின்” தொடர் பயணத்தை முன்னெடுத்து வருகிறார். ஆண்டு தோறும் தந்தையின் நினைவாக இலைமறை காயாக இருக்கும் பாடகர்களை வளர்த்துவிடும் நோக்கில் அவர்கள் மத்தியில் “காலக் குரல் பாடல் போட்டி” நிகழ்வுகளை நடாத்தியும் வருகிறார்கள். அண்மையில் தந்தையின் 09ஆம் ஆண்டு நினைவாக தந்தையோடு பயணித்த நெருங்கிய கலைஞர்களுக்கு எஸ்.ஜி.சாந்தன் நினைவாக விருது வழங்கி மாண்பேற்றப்பட்டது. இச் செயற்பாடுகள் ஒரு கலைஞனின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும் பறைசாற்றி நிற்பதோடு கலைப் படைப்பாளர்கள் வாழும் போதும் அதன் பின்பும் அவர்களின் கலைத் தடங்கள் நீண்டு செல்ல வேண்டும் என்பதற்கு இவ்வாறான நிகழ்வுகள் சான்றாகிறது.
து.திலக்(கிரி),
22.03.2026,
05:55.


