யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் மகளின் காதலனால் அடித்துக் கொலை!

0
100

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட விரிவுரையாளரரான திருமதி தயாழினி திலீபன் அவர்கள் அவரது மகளின் காதலனால் கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது..


விரிவுரையாளர் தயாளினி திலீபனின் சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்பு.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண காவல்துறையினர் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மகள் மற்றும் 21 வயதுடைய மகளின் காதலன் என இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், மகளின் காதலனின் தாக்குதலின்போது உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், விரிவுரையாளரின் சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என மகளின் காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளரின் சடலம் #தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here