
பேசாலை கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் இருவர் நேற்று உயிரிழந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் ஒரு சிறுவன் கடலில் தேடப்பட்டு வந்த நிலையில்
குறித்த சிறுவனும் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட சோக நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சோகமான சம்பவத்தில்
பேசாலை , வசந்தபுரம், உதயபுரம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ..
இவ்வாறான சம்பவங்கள் குறித்து பெற்றோர் தமது பிள்ளைகளில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு உள்ளதாக பலரும் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.


