
காதலை நெஞ்சினில்
சுமக்கும் வயதில்
தமிழீழத் தாகத்துடன்
நஞ்சினை நெஞ்சினில்
சுமந்தவரே
புஞ்சையில்
கொஞ்சி விளையாடும்
புல்லினங்களுடன்
கானகத்தில் காரிருளுடன்
கையிலும், தோள்களிலும்
ஆயுதம் ஏந்தி
தமிழீழ மண் மீட்க
தரைப்புலியாக
வான்புலியாக
கடற்புலியாக
கரும்புலியாக
களமாடிய
காவிய நாயகர்களே
தமிழ்த் தாயின்
கருவில் உருவாகி
தமிழீழத் தாயின்
கருவறையில்
விதைக்கப்பட்ட
வித்துக்களே
எதிரி உங்களை வணங்கத் தடுத்தாலும் புயல் காற்று
வீசினாலும்
வானம்
இடி இடித்தாலும்
காரிருள் சூழ்ந்தாலும்
காந்தள் மலர்ந்திடும்
கார்த்திகைத் திங்களில்
உங்களை வணங்க
அன்றும் இன்றும் என்றும் மறவோம்
மறவர்களே – எங்கள்
இறைவர்களே.
இளவாலையூர் கவி


