தமிழர் மானம் காக்க போராடிய தீபங்களே! உங்கள் கனவுகள் நாளை நிறைவேறுமே!!

0
316

ஈழத்தை ஆண்ட வீரர்களே
எம் மண்ணில் உறங்கும் மாவீரர்களே
தமிழர் மானம் காக்க போராடிய தீபங்களே
உங்கள் கனவுகள் நாளை நிறைவேறுமே!

புரட்சியை
விதைத்தவர்கள் உறங்கினாலும்
எழுச்சியை
விதைகள் எடுத்து செல்லும்

செண்பகமும் உங்கள் புகழ் பாடும்
கார்த்திகை
மலரும் ஓசை
நாடு முழுவதும் கேட்கும்

நரிகளும் ஓடி ஒழியும்
வாகையோ தமிழீழத்தின் மீட்பை கொண்டாடும்

வன்னிக் காட்டிலே மயில் கூத்தாடும்
கோணமலையில் புலிக்கொடி பறக்கும்
யாழில் பண்ணிசை ஒலிக்கும்
மன்னாரில் முத்துக்கள் வந்து கரைசேரும்.

தாய்மார்களின் கண்ணீருக்கு விடை கிடைக்கும்
அக்காமாரின் தியாகத்திற்கு, தங்கைமாருக்கு, விடியல் உண்டாகும்

இராவணனின் செங்கோள் நிலை நாட்டப்படும்
சங்கிலியன் அரசின் எல்லைகள் மீண்டும் வடிவம் பெறும்

கரிகாலனின் சிந்தனைகள் எம் நாட்டை வழிக்காட்டும்.

_ யாழன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here