
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் தாயார் நேற்று புதன்கிழமை உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.
ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.

இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேர்த்தியாரான கமலா அம்மா (75)நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 19.11.2025 புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

தனது மகன் சிறையில் இருந்துவந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவேன் இவங்களும் விடுறாங்களில்ல என்னவாம் தம்பி சொல்லுறாங்கள் என கண்ணீருடன் மூன்று வாரத்திற்கு முன் சந்திக்கும்போது கேட்ட ஆன்மா பிள்ளைகளின் ஏக்கத்தோடு பிரிந்துள்ளது.


