மல்லாவிப் பிரதேசத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

0
72

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று (19) மிகச் சிறப்பாக இடம் பெற்றது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
முன்னதாக மாவீரர்களது பெற்றோர் உறவினர்கள் அனிச்சியன்குளம் பாடசாலை முன்பாக இருந்து மக்களவாத்திய இசையுடன் மல்லாவி சிவன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

தொடர்ந்து மண்டபத்தில் மாவீரர்களில் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் கருத்துரைகளும் இடம் பெற்றதையடுத்து பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாவீரர்களின் பெற்றோர்களே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here