
திருகோணமலை கடற்கரையினை ஆக்கிரமித்து விகாரை கட்ட முயற்சிக்கப்படுமாயின் அது உடன் தடுத்து நிறுத்தப்படவேண்டும். என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக அரசதிணைக்களங்கள், அதிகாரசபைகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
அதிகாரிகள் இன்று விடுமுறைநாள் என நடிக்கலாம், நழுவலாம்.ஆனால் மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் நிற்கவேண்டும் உடனடியாக மாநரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும்
மாடுமேய்ப்பதை மட்டும் படம்போட்டு விளம்பரப்படுத்தும் மாநகரசபையின் முகப்புத்தக நிருவாகி இவ்விடயம் தொடர்பான விவரத்தை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் எனவும் .
சில ஊடகங்கள் மாநகரமேயருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தால் பதில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


