சிலாபம் – தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு!

0
65

சிலாபம் – தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கிரிபத்கொடையில் இருந்து சுற்றுலா சென்ற இளைஞர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்கள் தெதுருஓயாவில் நீராடிய போது ஐவர் காணாமல்போயிருந்தனர்.

அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காணாமல்போயிருந்த ஏனைய நால்வரையும் தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது.

அதன்போது மேற்படி நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அதேவேளை, உயிருடன் ஏலவே மீட்கப்பட்டவரும் பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here