
தெல்லிப்பழை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8:30 மணியளவில் இடம் பெற்ற டிப்பர் உந்துருளி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யாழ் கலைஞனுமான வசந்தன் வயது 34 சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்
தனது வீடு நோக்கி உந்துருளியில் பயணித்தபோது வேகமாக பின்னால் வந்த டிப்பார் வாகனம் மோதியதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது ,
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது , மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


