கரும்புலிகள் – நிழலின் நெருப்புகள் (புரட்சியின் இரவுகள் ஏந்திய நெஞ்சங்கள்)

0
84


கரிய இருளில் ஓர் கனலாய் நிழல்போல் வந்தார்கள்,
கரும்புலிகள் — சுழன்றெழும் சூறாவளியின் நரம்பாய்!
கந்தக வாசமோ நெஞ்சில் பூச்சிக்கோடு போலவே,
மனித எல்லைகளை மீறியவர்கள் — மரணத்தை வெளியோக்கென்ற வீரர்கள்!

படர்ந்த இருளில் ஒளியை விதைத்தனர்,
பாதி சொருகிய உயிரை, நாடாய் பரிமாறினர்!
இறுதியே நிச்சயம் என்ற போதும்,
ஈழமாய் சிந்தியதென்றால், தங்கள் இரத்தம் தான்.

தடம் இல்லா பாதையில் நடந்த தியாகத் தந்தைகள்,
தொட்டதெல்லாம் சுடர்கொணர்ந்த புரட்சி நிழல்கள்,
தூங்காத கண்களால் நாடு கனவாகி,
தூண்டிலேற்றினார்கள், விடுதலையின் மின்னல் அம்புகளை!

“மரணமே! வந்தால் வா!” என முழங்கிய வீரசப்தம்,
புலித்தோல் மீதே சுட்டது, பாசிசத்தின் புலக்கனல்!
உடலோ பொடி ஆனாலும், ஊறும் இரத்தமோ,
மண்ணை விடுதலைப் புனிதமாய் குளிரவைத்தது.

நிழலாயினும் மறக்காதே –
நெஞ்சங்கள் இங்கும் எரிகின்றன, கரும்புலிகள் பெயரால்!
கடவுளின் கோவிலில் தீபம் போல,
கரும்புலிகள் இரவுகளை விளக்காய் தொங்க விட்டனர்!

『 ஈழத்து நிலவன் 』
02/07/2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here