கொனீபா ஆண்கள் ஆசியக்கிண்ண முதலாவது உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழம் அணி வெற்றி!

0
118

கொனீபா ஆண்கள் ஆசியக்கிண்ண முதலாவது உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழம் வெற்றிபெற்றுள்ளது.

கொனீபா ஆண்கள் ஆசியக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நடப்பு வெற்றியாளர்களான தமிழீழ உதைபந்தாட்ட அணி இம்முறை போட்டிகளுக்கு தலமை தாங்கி பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது.


நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத்தேசியக்கொடி மற்றும் பிரித்தானியா,திபெத்,கிழக்கு துருக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியக்கொடிகளும் ஏற்றப்பட்டு கலை கலாச்சார நிகழ்வுகளுடன் முதல் நாள் ஆட்டம் ஆரம்பமாகின.

Conifa ஆசியக்கிண்ணம் 2025 முதல் போட்டியில்
தமிழீழம் எதிர் திபெத் 1வது போட்டியில் தமிழீழம் 4-0என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
தமிழீழம் சார்ந்து பிரசாந்-1,
அட்சயன் 1,சாறுசன்2,கோல்களையும் அடித்து தமிழீழ அணியின் முதலாவது வெற்றியை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here