செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் தீவிரம்!

0
141

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் தீவிரம்!

யாழ்ப்பாணம், ஜூன் 24, 2025 – செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, “அணையா தீபம்” என்ற தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் உணர்வுபூர்வமாகத் தொடர்கிறது.

யாழ் வளைவை அண்மித்த செம்மணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை அணையா தீபம் ஏற்றப்பட்டு இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நேற்றைய தினம், செம்மணி தொடர்பான கதை வாசிப்பு நிகழ்வும், அதைத் தொடர்ந்து இரவு ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்றது. இன்றும் மக்கள் அமைதி வழியில் தங்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் மையமாக அமைந்துள்ள அணையா தீபத்திற்கு எண்ணெய் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துவதற்காக மலர்களை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மணிப் புதைகுழி சம்பவம் தொடர்பான நீதிக்கான மக்களின் நீண்டகால ஏக்கத்தை இந்தப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள “அணையா விளக்கு” போராட்டத்தின் நாளைய இறுதி நாள் ஏற்பாடுகள் தொடர்பில் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் இன்று பிற்பகல் ஊடக சந்திப்பை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here