
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பத்மநாதன் தனீஸ்வரன் என்ற நபரே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மேற்படி நபர் நேற்று புதன்கிழமை இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பை இயங்கச் செய்துள்ளார்.
இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குடும்பஸ்தர் கீழே வீழ்ந்ததால் அவர் மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணையை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.