வல்வெட்டித்துறையில் காவல்துறையினரின் அடாவடியை மீறி சங்கீதனின் விடுதலைக்கு குரல் எழுப்பிய மக்கள்!

0
27

​பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை சந்தியில் இன்று (08.06.2026) காலை 10.30 மணியளவில் எழுச்சிமிக்க கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது..


“இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் கைது செய்வோம்” என நேற்றைய தினம் வல்வெட்டித்துறை காவல்துறையினர் ஏற்பாட்டாளர்களைக் கடுமையாக மிரட்டி, அச்சுறுத்தியிருந்தனர். ஆனால், அந்த அடக்குமுறைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வீதியில் இறங்கிப் போராடினர்.

ஒலித்த முழக்கங்கள்:
​பாடகர் சங்கீத்தை உடனடியாக விடுதலை செய்!
​கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) முற்றாக நீக்கு!
​வல்வெட்டித்துறை பொலிஸாரின் அடக்குமுறைகளை உடனே நிறுத்து!
​👥 சமூக அரசியல் செயற்பாட்டாளர் விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் இரா. சுரேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில்:
​தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
​வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ்
​வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன்
​வல்வெட்டித்துறை நகரசபை பதில் தவிசாளர் நா. பத்மநாதன்
மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அரசியல்-சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

​அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்! நீதிக்கான குரல் ஓங்கி ஒலிக்கும்!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here