
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று 13.08.2026 வியாழக்கிழமை கொக்குவிலில் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உணர்வோடு இடம்பெற்றது.

இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட சபேசனுடன் பயணித்த ஊடகவியலாளர்கள் பலரும் கண்ணீரோடு தமது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


நிறைவாக குடும்ப உறவுகளின் தாங்கொணாத் துயரோடு வீட்டில் இருந்து விடைபெற்ற சபேஸ்வரனின் உடல் இன்று மதியம் தீயுடன் சங்கமித்தது.









