
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம்.

முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி ஜெரோம். இவருக்கு வயது 18, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை (L) நேற்று 01.08.2026 சனிக்கிழமை மாலை மடு திருத்தலப் பகுதியில் உயிரிழந்துள்ளார்.
உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளைத்தான் செலுத்தி சென்றுள்ளார், மோட்டார் சைக்கிளை செலுத்தி இவ்வாறு விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை, அந்த பகுதியில் வேகமாக வாகனம் செலுத்த தடை, அப்படியிருந்தும் ஓரளவு வேகமாகத்தான் அவர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றிருக்கிறார்.
அந்த சந்தர்ப்பத்தில்தான் வீதி தடையை கடக்க முற்பட்ட போது விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
தவிர, கடந்த சில தினங்களாக, பல விபத்து சம்பங்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகிகொண்டிருக்கின்றது, குறிப்பாக நீர்கொழும்பில் இளைஞர்கள் ப*லியான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு பல சம்பவங்களை பார்த்தும், இளைஞர்கள் நிதானமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துவது இல்லை, அவர்களைத்தான் வயது கோளாறு திருத்த முடியவில்லை என்றாலும், பெற்றோர்களாவது ஜோசிப்பது இல்லையா?
குறைந்த பட்சம் 23 வயது பூர்த்தியாகும் வரையாவது, மோட்டார் சைக்கிள்களை வாங்கி கொடுக்காதீர்கள்,
சாரதி அனுமதி பத்திரத்திற்கும் விண்ணப்பிக்க அனுமதிக்காதீர்கள் (குடும்ப சுமையை சுமந்து வேலைக்கு செல்பவர்களுக்கு இது பொருந்தாது).
உறவினர்கள், நண்பர்கள் இவ்வாறான இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓட கொடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக பெற்றோர், படித்து முடித்தவுடன் உயர் ரக மோட்டார் சைக்கிளை தேவையில்லாமல் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
அவ்வாறு நீங்கள் வாங்கி கொடுப்பவர்களாக இருந்தால், உங்கள் பிள்ளை உயிரோடு இருப்பதை விரும்பாத பெற்றோர்கள் என்றுதான் உங்களை இந்த சமூகம் புரிந்துகொள்ள முடியும்.
(நன்றி: முகநூல்)


