
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரண்டு இளம் உயிர்கள் பறிபோயுள்ளன.
விபத்து எப்படி நடந்தது?
டிப்பர் வாகனமும் உந்துருளிகளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
- தமிழ்ச்செல்வன் தனேஸ் (வயது 21)
- அருணவன் செல்வரெத்தினம் (வயது 19) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன் என்பதும், மற்றையவர் உயர்கல்வி/வேலைவாய்ப்பிற்காக பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

- விபத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் காவல்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
- சடலங்கள் இரண்டும் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
- சம்பவம் தொடர்பில் மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


