முகநூல் பக்கங்களை இடைநிறுத்த இலங்கை அரசுக்கு அதிகாரமில்லை!

0
320

உரிமையாளர்கள் இல்லாத முகநூல் பக்கங்களை இடைநிறுத்தவோ அதனைக் கட்டுப்படுத்தவோ இலங்கை அரசுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுமார் 20 லட்சம் முகநூல் பக்கங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது சிக்கலுக்குரியது என அந்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.

முகநூல் கணக்குகளை நீக்கவோ, அவற்றை முறைப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கோ, வேறு அணிகளுக்கோ அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here