
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2026 ஆரம்பமாகியுள்ளன.

இன்று 18.07.2026 சனிக்கிழமை லெப்.சங்கர் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் பொதுப் படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது நடுவர்களின் உறுதிப்பிரமாணத்துடன் போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன

நாளை 19.07.2026 ஞாயிற்றுக்கிழமை தெரிவும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
குறித்த போட்டிகள் கடந்தவாரம் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களும் இடம்பெற ஏற்பாடாகி பிரான்சில் அதிகரித்த வெப்பம் காரணமாக இடைநிறுத்தம் பட்டமை தெரிந்ததே

காலம்:-18,19.07.2026
(சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:-08.30 மணி
இடம்:-BLD : CENTRE SPORTIF NELSON MANDELA
Avenue Paul Logevin
95200 SARCELLES
















