பல கனவுகளுடன் ஓமன் நாடு சென்ற வவுனியா இளம் பெண் இன்று உயிரற்ற உடலமாக நாடு திரும்பிய சோகம்!

0
4

வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா, வீட்டுப் பணிப்பெண்ணாக ஓமன் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர், அவரது உடல் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் அவரது உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மேலதிக சட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் ஊரவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here