
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவருமான பெருமதிப்பிற்குரிய இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா அவர்கள் இன்று 08.09.2026 அதிகாலை இயற்கை எய்தியுள்ளார் என்ற செய்தியறிந்து ஆழந்த கவலையடைகின்றோம்.
அவர்களது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தனது 17வது வயதில் அரசியல் பயணத்தில் இணைந்து கொண்ட அவர் தனது இறுதி மூச்சு வரை தமிழ்த் தேசிய விடுதலைக்காக உறுதியோடு பயணித்த அற்புதமான மனிதர்.
நேர்மையான உறுதியான தேசப் பற்றாளனை எமது தேசம் இழந்து நிற்கிறது. இவரது இழப்பு இவரது குடும்பத்தினருக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்திற்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வேதனையில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தேசப்பற்றாளனின் மறைவால் துயரத்தில் ஆழ்திருக்கும் எமது மக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தலைமைச் செயலகம்


