இன்று சுதந்திர சதுக்கத்தில் ஸ்ரீபவன் முன்னிலையில் மைத்திரி பதவிப்பிரமாணம்!

0
1069

maiththiriகொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர்  மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
இன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இந்த தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here