வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!

0
38

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.. கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகரான கராகஸில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெனிசுலாவில் அதிகாலை 5 மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
7 புள்ளி 2 மற்றும் 7 புள்ளி 5 ரிக்டராக அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்களால் குடியிருப்புகள் மட்டுமின்றி விமான நிலையம், மருத்துவமனை என பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. .இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெனிசுலாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் 6.9 ரிக்டராக நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here