
பிரித்தானியயாலிருந்து தனது தாயாரைப் பார்ப்பதற்காக இளைய மகனுடன் யாழ்ப்பாணம் வந்த 51 வயதான குடும்பஸ்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மயங்கி வீழந்து மரணமானார். இச் சம்பவம் கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வருபவருமான செல்லையா விஜயகுமார் என்ற 51 வயதான குடும்பஸ்தரே கட்டுநாயக்காவில் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.


