
இலங்கை வான்படையினரின் கொடூரமான குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று மாலை 4:30 மணியளவில் எமது கட்சியினரால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது.
1995 ஜூலை 9 அன்று, பாதுகாப்புத் தேடி நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்திலும், சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் 140க்கும் மேற்பட்ட எமது உறவுகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
வரலாற்றின் இந்த கருப்பு நாளை நினைவுகூர்ந்து, உயிரிழந்த எமது தொப்புள்கொடி உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


















