
2006ஆம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் படுகொ**ச் சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (08) மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வதேச அமைப்பான Action Against Hunger நிறுவனத்தில் பணியாற்றிய 17 தன்னார்வ தொண்டர்களின் நினைவாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்த 17 பேரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத், வேலன் சுவாமிகள்,மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தினர், அருட்தந்தை,சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

















