
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 16 வாரமாக போராட்டம் தொடர்கிறது.
எமது போராட்டத்தின் வடிவை மாற்றி அரச தரப்பு மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களையும் அரச திணைக்களங்களின் செயற்பாடுகளையும் முடக்கி எமக்கான தீர்வைக் கோரவுள்ளதாக #மயிலிட்டிமீள்குடியேற்றஅபிவிருத்திக்குழு தெரிவுத்துள்ளது.

வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் #இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் #பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் உள்ள இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 16 ஆவது வெள்ளிக்கிழமையாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



