மன்னார் மனித புதைகுழி அகழ்வு இன்று133 ஆவது நாள்!

0
416

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று (21) திங்கட்கிழமை 133ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.

தொடர்ச்சியாக மன்னார் மனித புதை குழியில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது.

மன்னார் மனித புதைகுழியில் இருந்த அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்? மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? என்பது தொடர்பாகவும் குறித்த புதை குழி இயற்கையான மயானமா? அல்லது கொடூரமாக கொல்லப்பட்டு குறித்த புதைகுழியினுல் புதைக்கப்பட்டனரா? என்பது தொடர்பான ஆய்வுக்காக மனித எலும்பு கூட்டு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here