
பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் மாபெரும் காட்டுத்தீயால் போர்டோ (Bordeaux) பெருநகரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் தீப்பிடித்துள்ளதால் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், ஜிரோண்ட் பகுதியில் மட்டும் ஒரே இரவில் மேலும் 50,000 பேர் தங்களது வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


