
பிரான்சில் ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனமும், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பும் இணைந்து நடாத்திய கடற்கரும்புலி மேஜர். காந்தரூபன், லெப்.கேணல் ராதா,
லெப். கேணல் பொன்னம்மான் ஆகிய மாவீரர்கள் நினைவான துடுப்பெடுத்தாட்டப் போட்டி இன்று 26.07.2026 நடைபெறுகின்றது. இன்றை போட்டிகளில் 27 கழகங்கள் பங்கு பற்றுகின்றன.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு பிரெஞ்சு தேசியக்கொடியை துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனத்தின் பொருலாளர் திரு. குபேரன் அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் விளையாட்டுத் துறையின் செயலாளர் திரு.. நிமலன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர்களுக்கான ஈகைச்சுடரை 1991 இல் ஆனையிறவு சமரில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட லெப். நிரோ அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது..

அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனக் கொடியை சம்மேளனத் தலைவர் திரு. அரவிந்தன் அவர்கள் ஏற்றி வைத்ததோடு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. ஆரம்ப நிகழ்வை அறிவிப்புடன், மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளர் ஒழுங்கமைத்து நெறிப்படுத்தியிருந்தார். இன்றைய காலநிலையும் அதற்கேற்ற வகையில் சாதகமாக உள்ளதால் போட்டிகள் உற்சாகமாக நடைபெறுகின்றன.




