​பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் திரண்டெழுந்த கலைஞர்கள்!

0
32


​பாடகர் சங்கீதனின் கைதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்க்ஷ

​வெறும் கலைக்கான குரலாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நீதிக்கான குரலாக இப்போராட்டம் ஒலித்தது:
​✊ கலைஞர்களுக்கு கைவிலங்கா?
✊ அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
✊ காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல்!
✊ தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தான் என்ன?
​என அடக்குமுறைகளுக்கு எதிராக வவுனியா மண்ணில் ஒன்றிணைந்த அனைத்து கலைஞர்களும், பொதுமக்களும் உணர்வோடு குரல் எழுப்பினர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here