பருத்தித்துறையில் 8 வயதுச் சிறுமி தூக்கில் சடலமாக மீட்பு!

0
203

பருத்தித்துறை – சாரையடி பகுதியில் வீட்டில் தனித்திருந்த 08 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாய், தந்தையர் வெளியே சென்ற நிலையில் சிறுமி வீட்டில் தனித்திருந்தார் என்றும் வீட்டார் திரும்பி வந்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருந்தபோதிலும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டுவயது சிறுமி தானாக தூக்கில் தொங்குவது சாத்தியமற்ற நிலையில் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here