திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத அறப்போராட்டம்!

0
11
Screenshot

திருச்சி சிறப்பு முகாமில் (சித்திரவதை முகாம் ) நடைபெற்று வரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஏனைய அனைவரும் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, ஈழ அகதிகள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான புகழேந்தி இன்று திருச்சி சிறப்பு முகாமிற்கு செல்லவுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் ஈழ அகதிகள் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here