
கடந்த யூன் மாதம் நடைபெற்று முடிந்த தமிழ்மொழி எழுத்துத் தேர்வு 2026 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
வழமைபோன்று பிரான்சு தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் குறித்த பணியில் இணைந்துள்ளனர்.
குறித்த தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியென்பது ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு மேலும் இன்றியமையாத ஒன்றாக அமைந்தது என தொடர்ச்சியாக குறித்த பணியில் பங்குகொள்ளும் ஆசிரியர்களின் பட்டறிவுப் பகிர்வாகக் கூறப்படுகிறது
ஐரோப்பிய நாடுகளில் தற்போது இடம்பெறும் கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியிலும் குறித்த பணி தடையின்றித் தொடரும் அதேவேளை, பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் ஆர்வத்துடன் தமதுபணியைத் தொடர்கின்றனர்.
( எரிமலை செய்திப் பிரிவு)


