
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உறவினரான 18 வயதுடைய இளைஞன் வீட்டில் நின்ற உழவியந்திரத்தை எடுக்க முற்பட்ட வேளை உழவியந்திரப் பெட்டிக்குள் நின்ற மூன்றரை வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உழவியந்திரத்தின் சில்லில் நசியுண்டு உயிர் பிரிந்துள்ளது.
நேற்று (21.08.2026) மாலை மேற்படி சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தில் ரதிஸ்குமார் டாருசன் என்ற குழந்தையே அநியாயமாக உயிரிழந்துள்ளது.


