கரணவாயில் கடை உடைத்துத் திருட்டு!

0
565
thirutuகரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியில் அமைந்துள்ள பலசரக்குக் கடை நேற்று இரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
கதவின் முன்கதவு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த பால்மா பைக்கற்றுக்கள் மற்றும் அலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் திருடப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here