
முல்லைத்தீவு கேப்பாபுலவில் நேற்று 24/06/2026 இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர் நில மீட்புப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியமக்கள்முன்னணி (TNPF) தனது முழுமையான ஆதரவை உறுதியுடன் வழங்குகிறது.

எமது மூதாதையர் வாழ்ந்த சொந்த மண், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு, மக்களின் கைகளில் ஒப்படைக்கப்படும் வரை இந்தத் தொடர் போராட்டம் ஓயாது..

மாற்று நிலத் திட்டங்களை முற்றிலும் நிராகரித்து, தங்களின் பூர்வீக நிலங்களையே கோரி நிற்கும் கேப்பாபுலவு மக்களின் இந்த நியாயமான அறப்போராட்டத்திற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றும் #அரணாகக் களத்தில் நிற்கும்!

அடுத்த தலைமுறையினரின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் நடக்கும் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குவோம்.


