
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் யாழ்.ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் அமரர் ஆறுமுகம்_சபேஸ்வரன் அவர்களின் தகனக்கிரியை இன்று மதியம் நிறைவுற்ற நிலையில், அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், துயருற்றிருக்கும் குடும்பத்தினரைச் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.



