தமிழர் தாயகம் வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை வழங்க வேண்டும் !

0
160


சிறீலங்காவின் இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை வடக்கு மாகான முதல் அமைச்சர் சி.வி, விக்கினேஸ்வரன் நேற்று (12) சந்­தித்துப் பேசி­ய­போதே இவ்வாறு கோரி­யுள்ளார்.
வடக்கின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் மற்றும் வாழ்­வா­தார நகர்­வு­களை கையாள்­வது குறித்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூத­ர­கத்தில் நடை­பெற்ற இந்தப் பேச்­சு­வார்த்­தையில் வடக்கு, கிழக்கு இணைப்பின் அவ­சியம் குறித்து முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யதை அடுத்து அந்த விடயம் தொடர்பில் மத்­திய அர­சாங்­கத்தின் இணக்­கப்­பா­டுகள் குறித்து ஆராய்­வ­தாக உயர்ஸ்­தா­னிகர் முத­ல­மைச்­ச­ரிடம் தெரி­வித்­துள்ளார்.
இந்தச் சந்­திப்புத் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கருத்துத் தெரி­விக்­கையில்,
இந்­திய அர­சாங்­கத்­துடன் ஏற்­க­னவே வட­மா­காண சபை சார்பில் நாம் நீண்­ட­கால பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இதில் ஒரு கட்­ட­மா­கவே நேற்றும் நான் இந்­திய உயர்ஸ்­தா­னி­கரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் வடக்கின் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இரு­நாட்டு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்து வின­வினேன். காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்தி மற்றும் பலாலி விமா­ன­நி­லை­யத்தின் அபி­வி­ருத்­திகள் குறித்து ஆரம்­பத்தில் இருந்தே இந்­திய அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு நாம் கொண்­டு­வந்­துள்ளோம். ஆகவே அவற்றை கையாள்­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. மேலும் தூத்­துக்­குடி, -தலை­மன்னார் இடை­யி­லான கப்பல் சேவை­யினை முன்­னெ­டுப்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. ஆகவே இந்த நகர்­வுகள் குறித்து பரி­சீ­லனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மேலும் வட­மா­கா­ணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்­பது குறித்து ஆரம்­பத்தில் இருந்து கலந்­து­ரை­யா­டப்­பட்டு வந்த நிலையில் எவ்­வா­றான வீடுகள் அமைப்­பது என்­பது குறித்த சில சிக்கல் நிலை­மைகள் காணப்­பட்­டன. பரி­சீ­லனை செயற்­பா­டு­களும் கையா­ளப்­பட்­டன. இப்­போது அவை குறித்து ஒரு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான நிதி ஒதுக்­கீ­டுகள் குறித்து பேசி­யி­ருந்தோம். வீடு­களை அமைப்­பது குறித்த அவர்­களின் தீர்­மா­னத்தை விரைவில் தெரி­விப்­ப­தாக அவர்கள் குறிப்­பிட்­டனர். மேலும் வீட்டுத் திட்டம் அமைப்­பது குறித்து மத்­திய அர­சாங்­கத்­துடன் இந்­திய அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் எனவும் உயர்ஸ்­தா­னிகர் தெரி­வித்தார்.
அத்­துடன் யாழ்ப்­பாணம் நகர மண்­டப புன­ர­மைப்­பு­க­ளுக்­காக 800 மில்­லியன் ரூபா நிதியை இந்­தி­யா­விடம் இருந்து கோரி­யி­ருந்தோம். அது குறித்தும் ஆரா­யப்­பட்­ட­துடன் மயி­லிட்டி மீன்­பிடி துறை­முக புன­ர­மைப்பு குறித்து இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலும் அத­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்­கான பாது­காப்­புகள் குறித்தும் நாம் இதன்­போது பேசி­யி­ருந்தோம். வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­கா­ரத்தில் ஆழமான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் வடக்கின் நகர்வுகள் குறித்து மத்திய அரசாங்கத்தின் அனுமதிகள் மற்றும் ஒத்துழைப்பும் அவசியம். ஆகவே இவை குறித்து பேசுவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மீண்டும் நாம் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் எனவும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here