பேருந்தை திருடிச் சென்றதால் யாழ் நகர் பகுதியில் பரபரப்பு!

0
241

யாழ்.நகரை அண்டிய பண்ணைப் பகுதியில் பேருந்தை திருடி சென்ற நபரால் சிறிது நேரம்  பரபர ப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் – மன்னாருக்குஇடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழமை போன்று சேவையில் ஈடுபட்டு யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்தி ருந்தது.
பயணிகளை யாழ்.நகரில் இறக்கிவிட்டு, நகரை அண்டிய பண்ணைப் பகுதியில் பேரு ந்தை நிறுத்தி விட்டு சாரதியும் நடத்துநரும் அருகில் இருந்த உணவகத்தில் உணவரு ந்த சென்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்.பொம்மைவெளி பகு தியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தை திறப்பு இன்றி இயக்கி அதனைக் களவாடிச் சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்ற போது பேருந்து சகதிக்குள் அகப்பட்டு தொடர்ந்து செல்ல முடியாது மாட்டிக்கொண்டது. அந்நேரம் அந்த வழி யாக வந்த வேறு தனியார் பேருந்து சாரதிகள் இருவர், குறித்த பேருந்தினை அவதானித்து பேருந்தின் சாரதி வேறு ஒருவராக இருப்ப தனையும் நடத்துநரை காணாததாலும் சந் தேகம் கொண்டு பேருந்தின் சாரதிக்கு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டனர்.

அந்நேரமே சாரதிக்கும் நடத்துநருக்கும் பேருந்து திருடிச் செல்லப்பட்டமை தெரிய வந் துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரை ந்து பேருந்துத் திருடனைப் பிடித்து பொலிஸா ரிடம் ஒப்படைத்தனர்.
யாழ்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பேருந்து திருட்டு இடம் பெற்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here