சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு , அந்தப் பகுதி மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறீலங்கா இராணுவத்தினரின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் காலவரையற்ற கவன வீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர் .
புதுக்குடியிருப்புப் பகுதியில் சிறீலங்கா படையினர் நிலைகொண்டுள்ள தமது சொந்த நிலங் களை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
15 நாள்கள் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முல் லைத்தீவு சிறீலங்கா இராணுவ அதிகாரி கால அவகாசம் வழங்கியிருந்தார்.
3 மாதங்களின் பின்னர் காணிகளை ஒப்படைப்பதாக அவர் வாக்குறுதி வழங்கினார். அந்த வாக் குறுதி நிறைவேற்றப்படும் என நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் தமது போராட்டத்தைத் தற் காலிகமாகக் கைவிட்டிருந்தனர்.
எனினும் சிறீலங்கா இராணுவத்தினரால் கொடுக்கப்பட்ட கால அவகாச வாக்குறுதிகள் காலாவ தியாகின. இந்த நிலையிலேயே மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகக் காணிஉரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.