வவுனியாவில் 8 வயதுச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

0
166

வவுனியாவில் எட்டுவயது சிறுவன் ஒருவர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த க.டிலக்சன் என்ற எட்டுவயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் நேற்றுமுன்தினம் கிணற்றுப் பகுதிக்குச் சென்று தண்ணீர் அள்ள முற்பட்டபோது தவறி கிணற்றின் உள்ளே வீழ்ந்துள்ளார்.இதையடுத்து, உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here