எம்.ஜி.ஆரின் 28-வது நினைவு தினம் ; ஜெயலலிதா மலர்தூவி மரியாதை!

0
278
242592506MGRமுன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 
இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களும் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நினைவிடம் முன்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி மொழி வாசிக்க, அதனை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக உறுப்பினர்கள் சென்னை வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 11 மணி அளவில் அங்கிருந்த புறப்பட்டுச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here