
கறுப்புயூலை – 23
தமிழரின் நினைவை விட்டு என்றும் அகலாத தமிழின அழிப்பு நாட்கள்.
இனக்கலவரம் என்ற பெயரில் நடாத்திய மாபெரும் தமிழினப்பின் 43 ஆண்டுகள்
இன்று செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட 448 உயிரற்ற பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை நீதிகேட்டு நிற்கின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்!
1983 ல் சிறையிலிருந்த அப்பாவி அரசியல் கைதிகள் முதல் சிங்கள இனத்துடன் சகோதரத்துவத்துடன் சேர்ந்து அறத்தோடு வாழ்ந்த தமிழ்மக்கள் 1983 யூலை 23,24,25 இந்த நாட்களில் இனக்கலவரம் என்ற பெயரில் தமிழின அழிப்பை செய்த 43 ஆண்டுகள்.
பௌத்த சிங்கள இனவாதி Nஐ. ஆர் nஐயவர்த்தன அரசு “ போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’’ என்று சொல்லி தனது தேசத்தில் வாழ்ந்த தமிழ் குழந்தைகள், பெண்கள், மதத்தலைவர்கள், வயோதிபர்கள் என்று 5000 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இனப்படுகொலை செய்யப்பட்டு 43 ஆண்டுகள்.
சொந்த வாழ்விட மண்ணை விட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், அயல்நாடுகளுக்கும், ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களை நோக்கி நாட்டைப்பறி கொடுத்த தமிழர்களாக சொந்த நாடு இருந்தும் நாட்டற்றவர்கள் அகதிகள் என்ற பெயருடன் லட்சக்கணக்காக தமிழர்களை அறிய வைத்த 43 ஆண்டுகள்.
1983 ல் தமிழின அழிப்பைச் செய்த பௌத்த சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச கழுவில் ஏற்றியிருந்தால் 2009 ல் பல லட்சம் உயிர்களை முள்ளிவாய் க்காலில் நாம் இழந்திருக்க மாட்டோம் அன்று சர்வதேசத்தின் அசமந்தப்போக்கின் 43 ஆண்டுகள்
இன்று
22.07.2026 இன்று செம்மணி தமிழர் புதைகுழி பகுதிக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய ( பிரான்சு, இத்தாலி, Nஐர்மனி, பிரித்தானிய போன்ற இன்னும் பல நாடுகளின் பிரதிநிதிகள் கண்கலங்கி நின்றதாக கண்ணுற்றாலும் தமிழர்களுக்கு என்ன சொல்லப்போகின்றார்கள். என்ற 43 ஆண்டுகள்.
காலங்கள் போனாலும், கலங்கி நின்றாலும் கண்களைத்துடைத்து விட்டு உயிரோடு வாழும் நாம் எமது நீதிக்காக குரல் கொடுப்போம். வாருங்கள், ஒன்று பட்டு ஓரணியில் ஒன்றல்ல பல நூறு தமிழர்களாக குரல் கொடுப்போம் வாருங்கள். இதுவும் உன் தேசிக்கடமையே தமிழா! உன்னை உலகிற்கு காட்டி தம் உடலை உரமாக்கிய உருக்குலையாத உன்னதமானவர்களுக்கு உன் கடமையென்ன தமிழா!
அரசியல் துறை – தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு
தமிழ் இளையோர் அமைப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு


