இவ்வாண்டு நத்தார் கொண்டாட்டத்திற்காக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் ஆனல்ட் குடும்பத்தினருக்கும் மைத்திபால சிறிசேனவின் வீட்டில் நத்தார் விருந்து வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த விருந்துபசாரத்திற்கு சுமந்திரனின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான வடமாகாணசபை உறுப்பினர் ஆனல்ட் அவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சருக்கும் சுமந்திரனுக்குமான பனிப்போர் ஆரம்பமான நாளிலிருந்து சில மாகாணசபை உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிரான சுமந்திரனால் களமிறக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு இருந்து வந்திருந்தது அறிந்ததே.
இவ்வாரம் யாழ் வந்தடைந்த மைத்திரிபால சிறிசேன நத்தார் கொண்டாட்ட நிகழ்விற்கு முதலமைச்சரை மட்டும் அழைத்திருந்த நிலையில் நேற்றையதினம் அவர் முதலமைச்சரை மட்டும் அழைத்தது தவறு எனவும் தமது வடமாகாணசபையில் குறிப்பாக ஆனல்ட் கிறிஸ்த்தவ மதத்தை சார்ந்தவரென்றும் அவைத்தலைவர் சி.வி.கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்புக்கு த.தே.கூட்டமைப்பின் ராஜதந்திரிகளால் முதலமைச்சருக்கு சவாலான ஒரு குழுவிற்கு மகிழ்வினை கொடுப்பதற்காகவே விசேடமாக அழைத்து சென்றதாக சம்பந்தன் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.