யாழ். வடமராட்சியில் ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் நினைவேந்தல்!

0
12

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04.2024 ) காலை உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது .

வடமராட்சி ஊடக இல்லத்தின் ஊடக உறுப்பினர் முருகப்பெருமான் மதிவாணன் தலைமையில் ஊடக இல்லத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரினை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க , தராகி சிவராம் அவர்களின் திருவுருவ படத்திற்கான மலர் மாலையினை யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி ரகுராம் அவர்கள் அணிவித்தார்.

தொடர்ந்து ரஜிவர்மன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அணிவித்திருந்தார்.

சம நேரத்தில் ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் யாழ் பல்கலைைக்கழ ஊடக துறை விரிவுரையாாளர் ரகு ராம் , , பாராளுமன்ற உறுப்பினர் செல்வராாசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் , முன்னாாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ,ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு | பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here