யாழில் கோர விபத்து: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

0
61

சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் இன்று (01.05.2024) புதன்கிழமை காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருசக்கர உழவு இயந்திரத்தில் (லான்ட் மாஸ்ரர்) பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர உழவியந்திரத்தின் பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற மகிழுந்து (ஹயஸ்) வாகனம் மோதியதில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் இரு சக்கர உழவியந்திரத்தில் பயணித்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் இரு சக்கர உழவியந்திரத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் மகிழுந்து வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here