பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு. 2024.

0
57

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் , தமிழ்ச்சோலைத்தலைமைப்பணியகம் இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 20ஆம்,21ஆம் நாட்களில் பாரிசின் 95ஆவது மாவட்டம் கார்லே கோனேஸ் என்னும் இடத்தில் நடைபெறுகின்றது.

இன்று சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் ஆரம்பமாகிய நிகழ்வு நடன ஆசிரியர்கள் மற்றும் நிகழ்வின் நடுவர்களின் கடவுள் வணக்கத்துடன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மற்றும் தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ச்சோலை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், நடுவர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அம்மாநகர துணை முதல்வர், கலாசார பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ள மிகச்சிறப்பாக ஆரம்பித்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடனம்,வாய்ப்பாட்டு, வயலின், தண்ணுமை (மிருதங்கம்)ஆற்றுகைகளில் 16 மாணவர்கள் தேர்வுக்கு பங்குபற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here