காசாவில் உடனடிப் போர் நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றியது!

0
20

காசாவில் ரமழான் பண்டிகையின் போது உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிறைவேறியது. அத்துடன் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் அழைப்பு விடுக்கிறது.

பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்களன்று முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முடியும் வரை உடனடி போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

நீடித்த, நிலையான போர்நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 14 நாடுகளின் வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும் தீர்மானம் கோருகிறது.

இருப்பினும் இந்த கோரிக்கை ஏப்ரல் 9 அன்று முடிவடையும் ரமழானின் போது போர்நிறுத்தத்திற்கான கோரிக்கையுடன் இணைக்கப்படவில்லை.

மேலும், காசா பகுதி முழுவதற்கும் மனிதாபிமான உதவியின் ஓட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசரத் தேவையை அது வலியுறுத்தியது மற்றும் மனிதாபிமான உதவிகளை அளவில் வழங்குவதற்கான அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு அழைப்பு விடுத்தது.

ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, ஈக்வடார், கயானா, ஜப்பான், மால்டா, மொசாம்பிக், தென் கொரியா மற்றும் சியரா லியோன் உள்ளிட்ட பலதரப்பட்ட நாடுகளுடன் அரபு நாடுகளின் உறுப்பினராக உள்ள அல்ஜீரியாவால் வெற்றிகரமான தீர்மானம் வரைவு கொண்டுவரப்பட்டது.

பாலஸ்தீன மக்கள் ஐந்து மாதங்களாக பயங்கர துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். “இந்த இரத்தக்களரி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எங்கள் கடமை. இறுதியாக, பாதுகாப்பு கவுன்சில் பொறுப்பேற்கிறது. .நா.வுக்கான அல்ஜீரிய தூதர் அமர் பெண்ட்ஜாமா கூறினார்.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்த தீர்மானம் ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கூறினார். இந்த யுத்த நிறத்தமானது தாக்குதலின் முடிவை, நம் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களின் முடிவைக் குறிக்க வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார். 

இஸ்ரேல் அல்லது ஹமாஸ் தீர்மானத்தை ஏற்று செயல்படுத்துமா என்பது வேறு விடயம். ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஹமாஸ், தீர்மானத்தை வரவேற்றுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here